தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான செ.சதீஸ்குமார் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான செல்லையா சதீஸ்குமார் (விவேகானந்தனூர் சதீஸ்) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.
சதீஸ்குமார் உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு கடந்த பெப்ரவரி முதலாம் திகதி ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறை யீட்டு மனு அவரால் மீளப்பெறப்பட்டதை அடுத்து நேற்று அவர் விடுதலையானார்.