தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் வேலைவாய்ப்புக்கான தனிநபர்களை அடையாளம் காண 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 7ஆவது கொரிய மொழித் தேர்வுக்கு 85,072 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கொரியப் பரீட்சைக்கு ஒரே வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை இதுவாகும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு, 31,378 நபர்கள் கொரிய மொழி புலமைத் தேர்வை எதிர்கொள்ள விண்ணப்பித்துள்ளனர்.
இந்தாண்டு பெப்ரவரி 13 முதல் 23 வரை ஒன்லைனில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகளை வழங்க ஆரம்பித்துள்ளது.
உற்பத்தி வேலைகளுக்கான பரீட்சை மார்ச் மாதம் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன்,, மீன்பிடித் துறைக்கான பரீட்சை செப்டம்பர் 1ஆம் திகதி இடம்பெறவுள்ளது.