Friday, February 13, 2026
31.1 C
Colombo
செய்திகள்உலகம்விளையாட்டில் தோல்வி - பார்வையாளர்கள் சிரித்ததால் 7 பேர் சுட்டுக் கொலை

விளையாட்டில் தோல்வி – பார்வையாளர்கள் சிரித்ததால் 7 பேர் சுட்டுக் கொலை

பிரேசிலில் பிள்ளியர்ட்ஸ் விளையாட்டில் தோல்வியடைந்த ஒருவரை பார்த்து சிரித்தமைக்காக 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்னெப் சிட்டி என்ற இடத்தில் உள்ள க்ளப்பில் பிள்ளியர்ட்ஸ் ஆட்டத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் (30) , இரு முறை தோல்வியடைந்துள்ளார்.

அதனால் அங்கிருந்தவர்கள் அவரை பார்த்து சிரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அவர், நண்பர்களை அழைத்து வந்து அவ்விடத்தில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles