தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது தற்போதைய படம் என அண்மையில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படம் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையை சரிபார்க்கும் பெக்ட் செக் இணையத்தளம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்த படம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டு, அதன் உண்மைத் தன்மையினை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, அவரின் முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, மாற்றியமைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
