Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிளில் மோதுண்ட பெண்ணின் நிலை கவலைக்கிடம்

மோட்டார் சைக்கிளில் மோதுண்ட பெண்ணின் நிலை கவலைக்கிடம்

பிலியந்தலை, மொரட்டுவ வீதியில் சுவரபொல பாதசாரி கடவையில் நேற்று (17) காலை வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் பிலியந்தலை சுவரபொல பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தனது நண்பரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கட்டுபெத்த பிரதேசத்தில் உள்ள ஏ.டி.எம் ஒன்றுக்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் இன்று (18) கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles