அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ள புதிய சட்டத்தின் படி வருடாந்தம் இரண்டு தடவைகள் மின்கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி மாதமும், ஜுலை மாதமும் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தில் மாற்றம் செய்யப்படும்.
ஜுலை மாதம் மின்னுற்பத்திக்கான கிரயம் மீளாய்வு செய்யப்பட்டு அந்த சமயத்தில் மின்கட்டணத்தை மாற்றவும், சலுகைகளை வழங்கவும் முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் தமது நம்பிக்கையின்படி ஜுலை மாதம் மின்கட்டணம் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.