மாத்தறை கடற்பரப்பில் நீராடச் சென்ற மூன்று பாடசாலை மாணவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, வெல்லமடம கடற்பரப்பில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன சிறுவர்களை தேடும் பணியை மேற்கொள்வதற்கு இலங்கை கடற்படையின் உதவி பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.