சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மார்ச் மாத இறுதியில் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை பணவீக்கம் சரிவடைந்து வரும் நிலையில், வட்டிவீதங்களை குறைப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.