Sunday, June 15, 2025
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழில் பெற்றோல் வழங்க மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு

யாழில் பெற்றோல் வழங்க மறுத்த ஊழியர் மீது வாள்வெட்டு

QR குறியீடு இல்லாமல் பெற்றோல் வழங்க மறுத்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் யாழ். நாவற்குழி எரிபொருள் நிலையத்தில் நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் QR குறியீடு இல்லாமல் பெற்றோல் வழங்குமாறு எரிபொருள் நிலைய ஊழியரை வற்புறுத்தியுள்ளனர்.

இதன்போது பெற்றோல் வழங்க மறுத்த ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் வந்த இருவரே இந்த வாள் வெட்டை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles