ஒரு கிலோ நெல்லுக்கு குறைந்தபட்சம் 140 ரூபாவை வழங்கவேண்டும் என டட்லி சிறிசேன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
ஒரு கிலோ நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்ய 100 ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஆனபோதும் இந்த தொகை விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறாக செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் நெல் கொள்வனவுக்கான விலையை அதிகரிக்காவிட்டால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட நேரிடும் எனவும் டட்லி சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.