சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 53 பேரை கடற்படை கைதுசெய்துள்ளது.
கடந்த 9 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாட்டின் பல்வேறு கடற்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், படகு ஒன்று உட்படகடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட பிரதேசங்களின் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.