Wednesday, June 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'சந்து' சுட்டுக்கொலை

‘சந்து’ சுட்டுக்கொலை

மினுவாங்கொட – பொரகொடவத்தை – ருவன் மாவத்தை பகுதியில் ஒருவர் நேற்றிரவு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

ஆடியம்பலம் – பில்லவத்தை பகுதியைச் சேர்ந்த சந்து என்றழைக்கப்படும் பிரபாத் பிரியங்கர (30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது வீதிக்கு அருகில் மறைந்திருந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் எனவும், பல்வேறு குற்றச்சாட்டில் நீதிமன்றில் இருந்து பிணையில் வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles