மின் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், உணவுப் பொதிகள், ரைஸ் மற்றும் கொத்து விலைகள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அப்பம் உள்ளிட்ட உணவு வகைகளின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.