ஹலவத்த – கொக்காவில பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து நபரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொக்காவில – முகுனுவதன பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது மகன் முன்னர் பொலிஸில் புகார் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
எனினும், ஹலவத்த வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக் காயம் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என சட்ட வைத்திய அதிகாரியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஹலவத்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.