டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் சொய்ச்சிரோ டொயோடா காலமானதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அவர் தனது 97 ஆவது வயதில் இருதய கோளாறு காரணமாக மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சொய்ச்சிரோ டொயோடா, நகோயா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற பிறகு 1952 இல் டொயோட்டாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.
இவர் டொயோட்டா நிறுவனர் கிச்சிரோ டொயோடாவின் மகனாவார்.
1961 இல், அவர் டொயோட்டாவின் நிர்வாக இயக்குநரானார்.
2009 இல், டொயோட்டாவின் தலைவராக பதவியேற்ற அவர், இறக்கும் வரை அந்த பதவியை வகித்தார்.
தற்போதைய தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அகியோ டொயோடாவின் தந்தையும் சொய்ச்சிரோ டொயோடா ஆவார்.