இன்று (16) முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்கட்டணத்தை செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் தொடர்பில் நிதியமைச்சு எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கும் என அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை 66மூ ஆல் உயர்த்த பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியதாக இலங்கை மின்சார சபை அறிவித்தது.
அதன்படி,புதிய மின் கட்டண திருத்தம் நேற்று (15) முதல் அமலுக்கு வருகிறது.
புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, 60 யுனிட் பயன்படுத்தும் வீட்டின் மின் கட்டணம் 276மூ அதிகரிக்கும்.
இதன்படி, 60 யுனிட்களை பயன்படுத்தும் வீட்டிற்கு 680 ரூபாவாக இருந்த மின் கட்டணம் 2,560 ரூபாவாக உயரும்.