Saturday, April 11, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயிர் தப்ப வெளியே பாய்ந்த இளைஞர் பேருந்து சில்லில் சிக்கி பலி

உயிர் தப்ப வெளியே பாய்ந்த இளைஞர் பேருந்து சில்லில் சிக்கி பலி

எம்பிலிபிட்டி – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் பயணித்த குறித்த இளைஞர் உயிர் தப்ப வெளியே பாய்ந்த போது பேருந்து சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 17 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் இவ்விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles