இன்றைய தினம் தனது பிள்ளை தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பெற்றோரிடம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ இதனை தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தன்று சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் பொலிஸார் விழிப்புடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதற்கும், கலந்து கொள்வதற்கும் தடை இல்லை என்றாலும், கடந்த ஆண்டுகளின் அனுபவங்களின் அடிப்படையில், பொலிஸார் விழிப்புடன் இருப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகளை சோதனை செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.