கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள அதன் பிரதான அலுவலகம் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு வழங்குவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பான அதன் கணினி கட்டஅமைப்பில் ஏற்பட்ட கோளாறே இதற்கு காரணம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஒரு நாள் சேவையின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் ஊடாக அனுமதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.