துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஏழு நாட்கள் கடந்துவிட்டன.
எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போது பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலி எண்ணிக்கை 50,000 ஐ கடந்து விடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.