நீர்கொழும்பு – கட்டான – திசாகேவத்தை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று (12) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
விமானப்படையின் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அத்துடன் தீப்பரவல் ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.