இலங்கையின் சனத்தொகையில் 35 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள 10க்கு 9 இலங்கை குடும்பங்களும், தோட்டங்களில் உள்ள 10க்கு 8 குடும்பங்களும் தமக்கு அன்றாடம் தேவையான உணவை கொள்வனவு செய்வதில் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், அந்த உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய தேவையான வருமானம் இன்மையே இதற்கான பிரதான காரணம் என கூறப்படுகிறது.
இலங்கையில் உள்ள 10 குடும்பங்களில் 9 குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால் அவதிப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படும் குடும்பங்களில் 10 சதவீதத்தினரே டிசம்பர் மாதத்தில் அரசாங்கம்இ அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியைப் பெற்றதாக அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்இ டிசம்பர் மாதத்தில் இலங்கை சனத்தொகையில் 43 வீதமானோர் உண்ணும் உணவின் அளவைக் குறைத்துள்ளதுடன், 67 வீதமானோர் தங்களுக்குப் பிடித்தமான உணவுகளை கைவிட்டு தமக்கு விருப்பமில்லாத உணவிற்கு மாறியுள்ளனர்.