நேற்று நடைபெற்ற சவுதி புரோ லீக் சுற்று போட்டியில் ரொனால்டோவின் அல் நசர் அணி- அல் வெஹ்தா அணியை சந்தித்தது.
இந்த போட்டியில் தன் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரொனால்டோ அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய ரொனால்டோ முதல் பாதியில் 21,40 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்துள்ளார்.
பின்னர் இரண்டாம் பாதியில் 53-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்து சவுதி புரோ லீக்கில் தனது முதல் ஹாட்ரிக் சாதனையை பதிவு செய்தார்.
அதன்பின்னர் 61-வது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து தனது அணியை 4-0 என்ற கணக்கில் வெற்றியடைய செய்துள்ளார்.
இதன் மூலம் தன்மீதான விமர்சனங்களுக்கு ரொனால்டோ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.