இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஒனேஷ் சுபசிங்கவின் மர்மமான மரணம் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து இந்தோனேசிய பொலிஸாரும் பரந்த விசாரணையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் முடிவுகளில் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழிலதிபரின் பிரேசில் பிரஜையான மனைவியும், மற்றுமொரு பிரேசில் பெண்ணும் அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மனைவி, மகள் மற்றும் பிரேசில் பெண் ஆகியோர் பிரேசிலுக்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஒனேஷ் சுபசிங்க தனது மனைவி, நான்கு வயது மகள் ஆகியோருடன் இந்தோனேசியா சுற்றுப்பயணத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார்.