இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு நாளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் விஜயம் செய்வார் எனக் கூறப்படுகிறது.
இன்று மாலை 4 மணியளவில் தனியார் விடுதியில் இடம் பெறும் யாழ்ப்பாண அபிவிருத்தி சார் விசேட கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் நாளை நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் சிலவற்றில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.