நீதிபதிகளின் வேதனத்திலிருந்து, உழைக்கும்போது செலுத்தப்படும் வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவை, உரிய மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கும் வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது வேதனத்திலிருந்து குறித்த வரியை அறவிடுவது சட்டவிரோதமானது என 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தன.