சீனாவின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதையடுத்து, ஏப்ரல் 3ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் பெய்ஜிங் இடையே விமான சேவையை மீண்டும் தொடங்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.
அதன்படி, ஷங்காய், பெய்ஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதற்கமைய, திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷாங்காய்க்கு விமானங்கள் புறப்பட்டு, முறையே செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஷங்காயிலிருந்து கொழும்புக்குத் திரும்பும் என்று ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.