பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீத் அக்பரை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஷெஹான் அமரசிங்க நேற்று (8) உத்தரவிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் கைது செய்யப்பட்ட ரஷித் அக்பர், வஹாப் வாதத்தை ஊக்குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
எவ்வாறாயினும், ரஷீத் அக்பருக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவரை விடுவிப்பதில் ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்த நிலையில், கொழும்பு மேலதிக நீதவான் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார்.
நீதிமன்றத்தின் வசமிருந்த ரஷித் அக்பரின் வெளிநாட்டு கடவுச்சீட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.