Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கி அனர்த்தத்தால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

துருக்கி அனர்த்தத்தால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு

இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி நாடுககளில் ஒன்றான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கமாகப தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை நேற்று (7) குறிப்பிட்டுள்ளது.

துருக்கியில் தேயிலை ஏற்றுமதிக்கான ஓர்டர்களைப் பெற்ற இலங்கை வர்த்தகர்கள் இதனால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துர்க்கியேவில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 1,000-10,000 கிலோகிராம் வரையிலான தேயிலையை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேயிலை சபை அனுப்பி வைக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles