Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதர்ஷன ஹந்துங்கொடவுக்கு பிணை

தர்ஷன ஹந்துங்கொடவுக்கு பிணை

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட, இன்று அதிகாலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கைதான அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிவான் உத்தரவில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு மே மாதம் தர்ஷன ஹந்துங்கொடவை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைக்கு அழைத்தனர். எனினும், அவர் வாக்குமூலம் அளிக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles