Thursday, April 24, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டை விட்டு இதுவரை 500 வைத்தியர்கள் வெளியேற்றம்?

நாட்டை விட்டு இதுவரை 500 வைத்தியர்கள் வெளியேற்றம்?

நாட்டின் நிலையற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளதாக, தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்வைக்கும் நியாயமற்ற மற்றும் தன்னிச்சையான வரி விதிப்பினால் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இந்த வரி முறையில் 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரையான தொழில் வல்லுநர்களிடம் அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்துக்கான மருந்துகள் இதுவரை கொள்வனவு செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles