மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தாமும் தேர்தலில் போட்டியிட்டு முன்னாள் ஜனாதிபதியை விட ஒரு வாக்கையேனும் பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ள ஹெலிகொப்டரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமானவர்களும் முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கருத்தை விமர்சித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அண்மைக் காலமாக கூறி வருகின்றார்.
இருந்தபோதும், அவரின் இந்த தீர்மானத்தை பலரும் விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
