பெப்ரவரி 17 ஆம் திகதி வரை எந்தவொரு திட்டமிடப்பட்ட மின்வெட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் 331,000 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் மின்சார சபையினால் அமுலாக்கப்படும் மின்வெட்டுகள் அங்கீகரிக்கப்படாதவை எனவும் அவை சட்டவிரோதமானவையாக கருதப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
