Tuesday, July 29, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்து கொள்வனவுக்காக வெளிநாடு செல்ல கெஹெலியவுக்கு அனுமதி

மருந்து கொள்வனவுக்காக வெளிநாடு செல்ல கெஹெலியவுக்கு அனுமதி

நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி அவரை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு தேவையில்லாத நிலையில் 2015 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 600 குழாய் குழாய்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அமைச்சருக்கு எதிரான வழக்கு விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அமைச்சருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் நாட்டுக்கு தேவையான மருந்து கொள்வனவுக்காக வெளிநாடு செல்ல அவசியம் இருப்பதாக அவரது சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதற்கமைய, அவருக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles