Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினேஷ் ஷாஃப்டர் கொலை: மேலும் இரு சிஐடி குழுக்கள் நியமனம்

தினேஷ் ஷாஃப்டர் கொலை: மேலும் இரு சிஐடி குழுக்கள் நியமனம்

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டர் கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு மேலும் இரண்டு குழுக்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளது.

ஷாஃப்டரின் தொலைபேசி பதிவுகளை மதிப்பீடு செய்வதற்கும் தடயவியல் பகுப்பாய்வு செய்வதற்கும் இரு குழுக்களும் நியமிக்கப்பட்டன.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பொரளை மயானத்தினுள் தினேஷ் ஷாஃப்டர் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் மற்றும் அவரது கைகள் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

அவரைக் கண்டுபிடித்த சக ஊழியர், ஷாஃப்டரை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், 51 வயதான தினேஷ் ஷாஃப்டர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

வாகனத்திற்குள் வாக்குவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பொலிஸார், குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவு, கொலைப் புலனாய்வுப் பிரிவினர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles