கடன் அடிப்படையில் பொருட்கள்/சேவைகளைப் பெறுவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதனை மீறும் எந்தவொரு அதிகாரியும் அவ்வாறான செலவுகளுக்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்க நேரிடும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.