சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்க மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (31) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமரசிங்க கடந்த ஜனவரி மாதம் 5ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கண்டி தளதா மாளிகைக்கு அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.