பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றில், திடீரென தடுப்புத்தொகுதி (ப்ரேக்) இயங்காமல் போனமையினால், சாரதி அந்த பேருந்தை மண்மேடொன்றில் மோதி நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
நேற்று (30) காலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இந்த பேருந்து பெரகல – விகாரகல பகுதியில் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இடது புறத்தில் பாரிய பள்ளம் காணப்பட்டதால் சாதுர்யமாக செயற்பட்ட சாரதி, வீதியின் வலப்பக்கத்தில் உள்ள வடிகாண் ஊடாக பேருந்தை செலுத்தி மண்மேட்டின் மீது மோதி அதனை நிறுத்தியுள்ளார்.
அவ்வாறு பேருந்து நிறுத்தப்பட்டிருக்காவிடின், மறுபுறத்தில் உள்ள சுமார் 500 மீற்றர் பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கும் என தெரிவிக
சம்பவத்தின் போது பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்துள்ளனர். டி.எம். பிரியந்த என்ற சாரதியே இந்த பேரும் விபத்தை தடுத்துள்ளார்.