Monday, June 16, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்பங்களாதேஷில் ஒளிந்த சிறுவன், மலேசியாவில் கண்டுபிடிப்பு

பங்களாதேஷில் ஒளிந்த சிறுவன், மலேசியாவில் கண்டுபிடிப்பு

ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர், ஆறு நாட்களுக்குப் பிறகு வேறு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக பங்களாதேஷில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

15 வயது சிறுவன் ஒருவன் பங்களாதேஷ் நகர் ஒன்றில் ஜனவரி 11 ஆம் திகதியன்று, விளையாடிக்கொண்டிருந்தபோது, கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்ட நிலையில் தன்னையறியாது நித்திரையில் ஆழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர் இருப்பதை அறியாத பணியாளார்கள், குறித்த கொள்கலனை பூட்டி மலேசியாவிற்கு கப்பலில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த சிறுவன் ஆறு நாட்களுக்குப் பிறகு ஜனவரி 17 ஆம் திகதியன்று அன்று மலேசிய அதிகாரிகளால் மலேசியாவின் மேற்கு துறைமுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles