கொழும்பு துறைமுகம் அருகே கடலில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் எஞ்சிய பகுதிகளை பிரித்து எடுத்துச் செல்லும் பணி ஆரம்பமாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் சால்வேஜ் நிறுவனம் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் 2021 மே மாதம் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் எரிந்து மூழ்கியதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.