Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் காற்று மாசு அதிகரிப்பு

கொழும்பில் காற்று மாசு அதிகரிப்பு

காற்றின் தரக் குறியீட்டின்படி, கொழும்பு நகரில் தூசித் துகள்களின் அளவு (Pm 2.5) நேற்று (29) பிற்பகல் 151 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் கூற்றுப்படி,இந்நிலைமை ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கானது

கொழும்பு, பத்தரமுல்லை, தம்புள்ளை, பதுளை முதலான பகுதிகளில் நேற்று (29) தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் புதுடில்லியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் அண்மைக்காலமாக தூசித் துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாகவும், இதன் தாக்கத்தினால் இந்நாட்டின் வளிமண்டலத்தில் தூசித் துகள்களின் அளவும் அதிகரித்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles