தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, ஆணைக்குழு உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தலைவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு தங்கள் பதவியை இராஜினாமா செய்யுமாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான சில அமைப்புகளின் ஆதரவு தாமதமாகி வருவதாகவும் ஜனாதிபதியின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் தலைவர் தனது கடிதத்தில் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.