செய்திகள்உள்நாட்டுலிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

லிந்துலை நகர சபையின் தலைவராக சந்தன பிரதீப் பொறுப்பேற்பு

தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவாகியுள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராவார்.

முன்னாள் தலைவரான அசோக சேபால அண்மையில் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.

அதற்கமைய, தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உபதலைவராக பதவி வகித்த லெட்சுமன் பாரதிதாஸன் தற்காலிக தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்நிலையில், அந்நகர சபையின் புதிய தலைவராக சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles