Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்

இந்தியாவுக்கு அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மேலும் 10 பேர் ஏதிலிகளாக சென்றுள்ளனர்.

வவுனியாவில் வசித்துவந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த, 5 சிறுவர்கள், 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என 10 பேரே தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தமது சொந்த கண்ணாடி இழைப்படகில் அவர்கள் பயணித்துள்ளனர்.

இதன்படி, நேற்றைய தினத்தில், இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாகவே, தாங்கள் புகலிடம் கோரி இந்தியாவுக்கு சென்றதாக தமிழகம் சென்ற இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு எதிராக வெளிநாட்டுப் பிரஜைகள் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles