நாடாளுமன்றத்தை அண்மித்த தியவன்னா ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மற்றைய நபர் கரையேறி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (26) அதிகாலை 2 மணியளவில் இவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளதாகவும், அதிகாலை 4.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.