உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி இல்லை என தாம் அறிவிக்கவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (24) நாடாளுமன்ற பொது நிதிக் குழு முன்னிலையில் உரையாற்றும் போதே செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிதியை திரட்டுவதில் சிரமம் இருந்தாலும், தேவைப்பட்டால், தேர்தலுக்கு நிதியை வழங்க நடடிவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் நிதிக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அந்த குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் கணக்கில் இன்று பதிவு செய்துள்ளார்.