மன்னார்-யாழ்ப்பாணம் வீதியின் முக்கம்பன் பகுதியில் வீதியைக் கடந்த 9 வயதான சிறுவன், நோயாளர் காவுகை வண்டி மோதியதில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புனரீன் – செம்மண்குட்டு பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் நோயாளர் காவுகை வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.