தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை இரும்பு ஆயுத்தால் தாக்கி கொலைசெய்துள்ளார்.
இந்த சம்பவம் கொஸ்வத்த- கஹட்டவில பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
இக்கொலை நேற்று (23) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், நிஷாந்தி அனுராதி என்ற 38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்டுள்ள பெண் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர் வீடு திரும்பியதிலிருந்தே யாரிடமாவது தொலைபேசியில் பேசுவதை சந்தேக நபரான கணவர் அவதானித்துள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையில் பல தடவைகள் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று (23) இரவு தகராறு முற்றி சந்தேக நபர், மனைவியை தாக்கியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த பெண் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், கொஸ்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.