Wednesday, June 18, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநானுஓய விபத்து: இறந்தவர்களில் 3 சிறார்களும் உள்ளடக்கம்

நானுஓய விபத்து: இறந்தவர்களில் 3 சிறார்களும் உள்ளடக்கம்

நானுஓயாவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

நானுஓயா, ரதல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது 60 பேர் காயமடைந்துள்ளதுடன், 53 பேர் தற்போது நுவரெலியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது 41 மாணவர்கள், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் மூன்று பெற்றோர்கள் பேருந்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கர வண்டி சாரதியும் உயிரிழந்துள்ளனர்.

பலியான சிறார்களில் 13 வயதான ஆணும், 8 மற்றும் 12 வயதான இரண்டு பெண் சிறுமிகளும் அடங்குகின்றனர்.

வேனில் பயணித்த 26, 27 வயதான இரண்டு ஆண்களும், 43 வயதான பெண்ணுமே பலியானதாக பொலிசார் தெரிவித்தனர்.

நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles