Wednesday, June 18, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளியலறையில் குழந்தை பிரசவித்த பள்ளி மாணவி

குளியலறையில் குழந்தை பிரசவித்த பள்ளி மாணவி

திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியொருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 ஆம் வகுப்பில் பயிலும் 16 வயது பள்ளி மாணவி ஒருவரே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளதாக கூறப்படுகிறது.

குளியலறையில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு, சிறுமியின் தாய் குளியலறையை திறந்து பார்த்தபோது, ​​தனது மகள் பிரசவித்திருப்பதை பார்த்துள்ளார்.

பின்னர், மாணவி தெபரவெவ வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன், பின்னர் பொலிஸாருக்கு இது தொடர்பில் நேற்று (19) அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles